Tuesday, October 12, 2010

தமிழில் பாட,ஆட தமிழர்கள் இல்லை

தமிழில் பாட,ஆட தமிழர்கள் இல்லை

தமிழர்களிடம் உள்ள நல்ல பழக்கம் என்னவென்றால் வரும் போகும் எவனையும் நன்கு உபசரிப்பார்கள்,ஆனால் கூட இருக்கும் தன இனத்தானை மறந்திடுவார்கள்.கேட்டால் வந்தாரை வாழ வைக்கும் தமிழர்கள் என்று பெருமை வேறு.ஏமாளி இனம் என்று சொல்லாமல் என்னவென்பது?நிஜ வாழ்க்கையில் பல உதாரணங்கள் இருந்தாலும் நம்மவர்களுக்கு விளங்கும் விதமாக கூற வேண்டுமென்றால் சினிமா நட்ச்சத்திரங்கள்தான் வேண்டும்.ரஜினி முதல் நயன்தாரா வரை தமிழகம் வந்து தமிழர்களுக்கு தண்ணிகாட்டிவரும் வெளிமாநிலத்தவரின் பட்டியல் மிகப்பெரியது.

தமிழ் சினிமா எனும் பெருங்கடலில் நடிகர்கள் பலரும் தமிழ் இல்லை.
நடிகைகள் சுத்தமாக தமிழ் இல்லை.
பாடகர்கள் தமிழ் இல்லை.
இசை அமைப்பாளர்கள் பலரும் தமிழர்கள் இல்லை.
கோடி கோடியாய் பணம் அள்ளும் தயாரிப்பாளர்களும் தமிழ் இல்லை.
இயக்குனர்கள் சிலரும் தமிழ் இல்லை.
தமிழ் படவசனங்களில் தமிழ் இல்லை.
தமிழ்பாடல்களில் தமிழ் இல்லை.

உலகில் உள்ள கோடிக்கணக்கான தமிழர்களில் மேற்சொன்ன திறமைகளுக்கு யாருமே இல்லை.ஆனால் எம்மை விட எண்ணிக்கை குறைந்த மாநிலத்தவர் பலர் இன்று நம் கண்முன் சுப்பர் ஸ்டார்களாக,அல்டிமேட் ஸ்டார்களாக உலாவிக்கொண்டு இருக்கிறார்கள்.வேறு மாநிலத்தவர் பலரும் தமிழ் படங்களில் பாடகர்களாகவோ,நடிக நடிகர்களாகவோ அறிமுகம் ஆனபின்புதான் அவரவர் சொந்த மாநிலங்களில் வாய்ப்பு பெறுகின்றனர்.

ஏன் இந்த நிலைமை?
குறைந்தது தமிழ் பாடல்களை தமிழ் பாடகர்களை வைத்து பாட வைத்தால்தான் என்ன?   

அண்மையில் நடந்து முடிந்த விஜய் தொலைக்காட்சி நடத்திய சுப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றது ஒரு வெளி மாநிலத்தை சேர்ந்த பெண்.திறமை என்பது வேறு.ஆனால் இதேபோல் வேறு மாநிலங்களில் சென்று திறமை இருந்தால் கூட நம்மவர்கள் யாரும் வெற்றி பெற முடியாது என்பதை யாவரும் ஏற்றுகொள்ளத்தான் வேண்டும்.கரணம் எல்லோரும் நம்மைப்போல் ஏமாளிகள் இல்லை.

ஆனால் தமிழர்கள் இருக்கோ இல்லையோ அந்த படத்தை தலையில் வைத்து கொண்டாட,டிக்கெட் எடுத்து படம் பார்க்க கோடிக்கணக்கில் ஏமாளிகள் நாம் இருக்கிறோம்.

2 comments:

ம.தி.சுதா said...

எனக்குத் தன் சுடு சோறு

Anonymous said...

aduththa thavaillaatha veddi pathivu.......

Post a Comment