தி.மு.க-காங்கிரஸ்....சிறு அலசல்
தமிழக சட்டமன்ற தேர்தல்கள் நெருங்கி வரும் இவ்வேளையில் கூட்டணி குறித்த எதிர்வுகூறல்கள் அதிகரித்தவண்ணம் உள்ளன.தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி உடையும் என்பதாக பரவலாக பேசப்படுகிறது.அனால் தமிழ்நாட்டு அரசியலை உற்று நோக்கும் எவரும் இக்கூற்றை ஏற்றுக்கொள்ளமாட்டார்.
காரணம் மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிலையில் மாநிலத்தில் காங்கிரசை ஓரம் கட்டக்கூடிய தைரியம் தி.மு.கவிடம் இல்லை.காங்கிரஸ் இன்றி ஆட்சியை பிடிக்க முடியாது என்ற காரணத்தினால் அல்ல,மாறாக மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறி விடக்கூடாது என்பதற்காக.காரணம் கருணாநிதியின் குடும்ப ஆட்சி மத்தியில்,மாநிலத்தில் என இரண்டாக பிரிக்கப்பட்டிருக்கையில்,ஆட்சிக்கூட்டணியில் ஏற்படும் மாற்றங்கள் நிச்சயமாக குடும்ப வாரிசுகள் மத்தியில் குழப்பங்களை ஏற்ப்படுத்தும் என்பதை கருணாநிதி நன்கு அறிவார்.ஆகவேதான் காங்கிரசின் கூச்சல்களுக்கு சற்று அடக்கி வாசிக்கிறது தி.மு.க.
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான இளங்கோவனின் நடவடிக்கைகள் பலருக்கு புரியாவிட்டாலும் அதில் உள்ள காய்நகர்த்தல்கள் மிக முக்கியமானவை.விஜயகாந்தின் தே.மு.தி.கவுடன் அவர் காட்டி வரும் நெருக்கமும்,விடும் அறிக்கைகளும் நிச்சயமாக திட்டமிடப்பட்டதொன்று.தி.மு.க அரசின் இயலாமையை சாதகமாக்கி கூடுதல் தொகுதிகளையோ அல்லது ஆட்சியில் பங்கையோ பெற்றுக்கொள்ள வேண்டி காங்கிரஸ் ஆடும் நாடகமே இது.தமிழகத்தில் தனித்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று கூறிக்கொண்டாலும் அது எந்தளவிற்கு சாத்தியம் என்பது காங்கிரசுக்கே தெரியும்.இந்நிலையில் மாநிலத்தில் ஆட்சியில் பங்கு எடுக்க வேண்டும்,அதற்கு தி.மு.கவை பணிய வைக்க வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் பல முனை காய்நகர்த்தல்களை மேற்கொள்கிறது.அது எந்தளவுக்கு சாத்தியம் என்பது அடுத்து வரும் சில மாதங்களில் தெரிந்து விடும்.
அ.தி.மு.கவின் மந்தமான அரசியலும்,தேர்தல் நேரங்களில் நடக்கும் பணப்பரிமாற்றங்களும் தி.மு.கவின் வெற்றியை உறுதி செய்கின்ற அதேவேளை அதன் கூட்டணிக்கட்சிகளையும் அதன்கூடவே வைத்துக்கொள்ளவும் உதவுகிறது என்பது உண்மை.தி.மு.கவின் பலம் என்னவென்று காங்கிரஸ் மேலிடம் அறியாமலில்லை.
Monday, September 27, 2010
Friday, September 24, 2010
மட்/புனித மிக்கேல் கல்லூரி
மட்/புனித மிக்கேல் கல்லூரி
ஆயிரக்கணக்கான கல்விமான்களை மட்டு மண்ணுக்கு உருவாக்கி தந்த பெருமைக்குரிய கல்லூரி.இயேசு சபை துறவிகளால் ஆரம்பிக்கப்பட்டு பல நல்ல ஆசிரியர்களால் உரமிட்டு வளர்க்கப்பட்ட கல்லூரி.
இதன் இன்றைய நிலை என்ன?
கூடைபந்தாட்டத்திற்கு பெயர் போன பாடசாலை இன்று இரண்டாம் நிலைக்கு தரமிறக்கப்படுள்ளது.
டென்னிஸில் வெற்றி என்பது நினைக்க முடியாது போய்விட்டிருக்கிறது.
தமிழ் மொழி,ஆங்கில மொழி தின போட்டிகளில் சக பாடசாலைகளை விட மோசமான பெறுபேறு.
உயர்தர பரீட்சை பெறுபேறுகளில் கூறும்படியாக எதுவுமில்லை.
மாவட்டத்தில் நல்ல போட்டித்தன்மையான ஆண்கள் பாடசாலை இன்மையால் திறமையான மாணவர்கள் அனைவரும் எப்படியோ இங்கு வந்து சேர்ந்து விடுகிறார்கள்.ஆனால் அவர்கள் சரியான விதத்தில் பட்டை தீட்டப்படுவதில்லை.சில ஆசிரியர்களை வகுப்பைவிட விட கூடுதலாக ஓய்வு அறையில்தான் அதிகம் காணமுடிகிறது.சில ஆசிரியர்களை பாடசாலை நேரத்திலும் வீதிகளில்,அரச அலுவலகங்களில் காண முடிகிறது.வகுப்பை விட்டு வெளியில் திரியும் மாணவர்களை கட்டுப்படுத்தவென்று கூறிக்கொண்டு வெட்டியாக திரியும் ஆசிரியர்கள் சிலர்.அனைத்து வகுப்புகளிலும் ஒழுங்காக பாடம் நடக்கும் என்றால் மாணவர்கள் எப்பிடி வெளியில் திரிகிறார்கள்.இருக்கும் பிரச்சனைகளுக்கு மேலாக அதிபருக்கு ஆதரவாக,எதிராக என்று குழப்பங்கள் வேறு.இந்நிலையில் எப்பிடி முன்னேறுவது?
காத்தான்குடி,ஏறாவூர் மற்றும் ஓட்டமாவடி பாடசாலைகளின் கற்பித்தல் திறனுக்கும்,ஆசிரியர்களின் அர்ப்பணிப்புகளுக்கும் முன் நீங்கள் எல்லாம் ....................கேவலம்.செய்யும் தொழிலை ஒழுங்காக செய்யுங்கள்,அது யாராக இருந்தாலும் சரி.ஆசிரியரோ, மாணவரோ, பழைய மாணவரோ அல்லது கல்வித்திணைக்களம் என்று ஒன்று உண்டாமே ,அதன் அதிகாரிகளோ யாராயினும் தயவுசெய்து கடமை தவறாதீர்கள்.சாதிக்க நிறைய காத்திருக்கிறது.தயாராகுங்கள் நம்மை சுற்றி போட்டி அதிகமாகிறது.
ஆயிரக்கணக்கான கல்விமான்களை மட்டு மண்ணுக்கு உருவாக்கி தந்த பெருமைக்குரிய கல்லூரி.இயேசு சபை துறவிகளால் ஆரம்பிக்கப்பட்டு பல நல்ல ஆசிரியர்களால் உரமிட்டு வளர்க்கப்பட்ட கல்லூரி.
இதன் இன்றைய நிலை என்ன?
கூடைபந்தாட்டத்திற்கு பெயர் போன பாடசாலை இன்று இரண்டாம் நிலைக்கு தரமிறக்கப்படுள்ளது.
டென்னிஸில் வெற்றி என்பது நினைக்க முடியாது போய்விட்டிருக்கிறது.
தமிழ் மொழி,ஆங்கில மொழி தின போட்டிகளில் சக பாடசாலைகளை விட மோசமான பெறுபேறு.
உயர்தர பரீட்சை பெறுபேறுகளில் கூறும்படியாக எதுவுமில்லை.
மாவட்டத்தில் நல்ல போட்டித்தன்மையான ஆண்கள் பாடசாலை இன்மையால் திறமையான மாணவர்கள் அனைவரும் எப்படியோ இங்கு வந்து சேர்ந்து விடுகிறார்கள்.ஆனால் அவர்கள் சரியான விதத்தில் பட்டை தீட்டப்படுவதில்லை.சில ஆசிரியர்களை வகுப்பைவிட விட கூடுதலாக ஓய்வு அறையில்தான் அதிகம் காணமுடிகிறது.சில ஆசிரியர்களை பாடசாலை நேரத்திலும் வீதிகளில்,அரச அலுவலகங்களில் காண முடிகிறது.வகுப்பை விட்டு வெளியில் திரியும் மாணவர்களை கட்டுப்படுத்தவென்று கூறிக்கொண்டு வெட்டியாக திரியும் ஆசிரியர்கள் சிலர்.அனைத்து வகுப்புகளிலும் ஒழுங்காக பாடம் நடக்கும் என்றால் மாணவர்கள் எப்பிடி வெளியில் திரிகிறார்கள்.இருக்கும் பிரச்சனைகளுக்கு மேலாக அதிபருக்கு ஆதரவாக,எதிராக என்று குழப்பங்கள் வேறு.இந்நிலையில் எப்பிடி முன்னேறுவது?
காத்தான்குடி,ஏறாவூர் மற்றும் ஓட்டமாவடி பாடசாலைகளின் கற்பித்தல் திறனுக்கும்,ஆசிரியர்களின் அர்ப்பணிப்புகளுக்கும் முன் நீங்கள் எல்லாம் ....................கேவலம்.செய்யும் தொழிலை ஒழுங்காக செய்யுங்கள்,அது யாராக இருந்தாலும் சரி.ஆசிரியரோ, மாணவரோ, பழைய மாணவரோ அல்லது கல்வித்திணைக்களம் என்று ஒன்று உண்டாமே ,அதன் அதிகாரிகளோ யாராயினும் தயவுசெய்து கடமை தவறாதீர்கள்.சாதிக்க நிறைய காத்திருக்கிறது.தயாராகுங்கள் நம்மை சுற்றி போட்டி அதிகமாகிறது.
Wednesday, September 22, 2010
பாகிஸ்தான் கிரிக்கெட்
பாகிஸ்தான் கிரிக்கெட்
சமீப காலமாக சூதாட்ட புகாரில் சிக்கி சீரழிந்து விட்டிருக்கிறது பாகிஸ்தானின் கிரிக்கெட்.
லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் spot fixing என ஆரம்பித்து ஏராளமான குற்றச்சாட்டுக்கள்.குற்றச்சாட்டுக்களும் அதன் பின்னரான பாக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் நடவடிக்கைகளையும் வைத்து பார்க்கும்போது வெறுமனே வீரர்களுக்கு மட்டுமன்றி அதிகாரிகளுக்கும் இதில் நெருங்கிய தொடர்பு உண்டென சந்தேகிக்க இடமுண்டு.பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, வீரர்களிடம் விசாரணை நடத்தியதா தெரியவில்லை.ICC மட்டுமே வீரர்களுக்கு தடை விதித்திருக்கிறது.இத்தனை மோசமாக விளையாடி இருந்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
ஆஸ்திரேலியா தொடரின்போது கம்ரன் அக்மலின் மிக மோசமான விக்கெட் காப்பு தொடர்பாக அவரை அணியிலிருந்து இடைநிறுத்த நினைத்தும் முடியாமல் போனது நினைவிருக்கலாம்.அந்த சந்தர்ப்பத்தில் அக்மல் தன்னை அணியிலிருந்து நீக்க முடியாது என பகிரங்கமாகவே கூறி வந்தமை கவனிக்க வேண்டியது.அவ்வாறு கூறும் தைரியம் எங்கிருந்து வந்தது?
மேலும் இந்திய மத்திய அமைச்சர் சரத் பவார் ICC தலைவராக பொறுப்பேற்றது முதற்க்கொண்டே சூதாட்ட புகார்கள் விஸ்வரூபமேடுத்திருக்கிறது.இது இந்தியர்களின் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சதியாகவும் இருக்கலாம்.
என்னதான் இருந்தாலும் பாக் வீரர்களின் நடத்தை ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.
சமீப காலமாக சூதாட்ட புகாரில் சிக்கி சீரழிந்து விட்டிருக்கிறது பாகிஸ்தானின் கிரிக்கெட்.
லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் spot fixing என ஆரம்பித்து ஏராளமான குற்றச்சாட்டுக்கள்.குற்றச்சாட்டுக்களும் அதன் பின்னரான பாக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் நடவடிக்கைகளையும் வைத்து பார்க்கும்போது வெறுமனே வீரர்களுக்கு மட்டுமன்றி அதிகாரிகளுக்கும் இதில் நெருங்கிய தொடர்பு உண்டென சந்தேகிக்க இடமுண்டு.பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, வீரர்களிடம் விசாரணை நடத்தியதா தெரியவில்லை.ICC மட்டுமே வீரர்களுக்கு தடை விதித்திருக்கிறது.இத்தனை மோசமாக விளையாடி இருந்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
ஆஸ்திரேலியா தொடரின்போது கம்ரன் அக்மலின் மிக மோசமான விக்கெட் காப்பு தொடர்பாக அவரை அணியிலிருந்து இடைநிறுத்த நினைத்தும் முடியாமல் போனது நினைவிருக்கலாம்.அந்த சந்தர்ப்பத்தில் அக்மல் தன்னை அணியிலிருந்து நீக்க முடியாது என பகிரங்கமாகவே கூறி வந்தமை கவனிக்க வேண்டியது.அவ்வாறு கூறும் தைரியம் எங்கிருந்து வந்தது?
மேலும் இந்திய மத்திய அமைச்சர் சரத் பவார் ICC தலைவராக பொறுப்பேற்றது முதற்க்கொண்டே சூதாட்ட புகார்கள் விஸ்வரூபமேடுத்திருக்கிறது.இது இந்தியர்களின் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சதியாகவும் இருக்கலாம்.
என்னதான் இருந்தாலும் பாக் வீரர்களின் நடத்தை ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.
சிறையில் ஒரு சிங்கம்
சிறையில் ஒரு சிங்கம்
நாம் தமிழர் அமைப்பின் தலைவரும் இயக்குனருமான மதிப்புக்குரிய அண்ணன் சீமான், தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைதாகி இன்னமும் சிறையில்.
எதிர்வரபோகும் சட்ட மன்ற தேர்தல் குறித்த சூடான அறிக்கைகள்,விவாதங்கள் தமிழகத்தில் சூடு பிடித்துள்ள நிலையில் ஒரு உண்மை தமிழனின் விடுதலை குறித்த விடயம் மழுங்கடிக்கப்பட்டுள்ளது.
ஈனப்பிறவி கருணாநிதியின் கேவலமான அரசியல் வரலாற்றில் மற்றுமொரு கரை படிந்த அத்தியாயம்.
நான் உட்பட அனைத்து தமிழர்களும் வெட்கப்பட வேண்டிய விடயம்.
கேவலம் விபச்சார நடிகைகளுக்கு வக்காலத்து வாங்கிய தமிழ் திரை உலகம்,அதிலும் குறிப்பாக இயக்குனர் சங்கம் தமது சங்க உறுப்பினர் தொடர்பில் வாய் மூடி மௌனிகளாகி நிற்பது மிகப்பெரிய துரோகம்.
இந்நிலையில் சீமானின் விடுதலைக்காக குரல் கொடுக்காதிருக்கும் அனைவரையும் கண்டிக்கிறேன்
நாம் தமிழர் அமைப்பின் தலைவரும் இயக்குனருமான மதிப்புக்குரிய அண்ணன் சீமான், தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைதாகி இன்னமும் சிறையில்.
எதிர்வரபோகும் சட்ட மன்ற தேர்தல் குறித்த சூடான அறிக்கைகள்,விவாதங்கள் தமிழகத்தில் சூடு பிடித்துள்ள நிலையில் ஒரு உண்மை தமிழனின் விடுதலை குறித்த விடயம் மழுங்கடிக்கப்பட்டுள்ளது.
ஈனப்பிறவி கருணாநிதியின் கேவலமான அரசியல் வரலாற்றில் மற்றுமொரு கரை படிந்த அத்தியாயம்.
நான் உட்பட அனைத்து தமிழர்களும் வெட்கப்பட வேண்டிய விடயம்.
கேவலம் விபச்சார நடிகைகளுக்கு வக்காலத்து வாங்கிய தமிழ் திரை உலகம்,அதிலும் குறிப்பாக இயக்குனர் சங்கம் தமது சங்க உறுப்பினர் தொடர்பில் வாய் மூடி மௌனிகளாகி நிற்பது மிகப்பெரிய துரோகம்.
இந்நிலையில் சீமானின் விடுதலைக்காக குரல் கொடுக்காதிருக்கும் அனைவரையும் கண்டிக்கிறேன்
Wednesday, September 15, 2010
சென்னை சூப்பர் கிங்க்ஸ்
சென்னை அபாரம்
சாம்பியன்ஸ் லீக் t20 இன் மற்றொரு போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் இலங்கையின் வயம்ப லேவன்ஸ் அணியும் மோதின.
சென்னை 200 ஓட்டங்கள் ,முரளி விஜய் 68 ,ரைனா 87 (44 ),ஆஹா கண்கொள்ளாக் காட்சி.
என் ஆதரவுக்கு உரிய அணியும் எனக்கு பிடிக்காத அணியும் மோதும்போது இப்பிடி ஒரு சந்தோஷ பரவசம் கிடைக்கும் எண்டு நினைக்கவே இல்ல.
பதிலுக்கு களம் இறங்கிய வயம்ப 103 ஓட்டங்களுக்குள் சுருண்டது இரட்டிப்பு சந்தோஷம்.அஷ்வின் 4 /18 .
எவ்வளவு நாளாச்சு இப்பிடி நான் சப்போர்ட் பண்ணின டீம் ஜெயிச்சு!!!!!!!!!!!!!!.
ஹெய்டன் ய நீக்கிவிட்டு ஜஸ்டின் கேம்ப் அல்லது மைக் ஹுசே ய அணியில் இணைத்தால் நல்லது.
சொதப்புவதர்க்கும் ஒரு அளவு வேண்டாம் ?????????
சாம்பியன்ஸ் லீக் t20 இன் மற்றொரு போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் இலங்கையின் வயம்ப லேவன்ஸ் அணியும் மோதின.
சென்னை 200 ஓட்டங்கள் ,முரளி விஜய் 68 ,ரைனா 87 (44 ),ஆஹா கண்கொள்ளாக் காட்சி.
என் ஆதரவுக்கு உரிய அணியும் எனக்கு பிடிக்காத அணியும் மோதும்போது இப்பிடி ஒரு சந்தோஷ பரவசம் கிடைக்கும் எண்டு நினைக்கவே இல்ல.
பதிலுக்கு களம் இறங்கிய வயம்ப 103 ஓட்டங்களுக்குள் சுருண்டது இரட்டிப்பு சந்தோஷம்.அஷ்வின் 4 /18 .
எவ்வளவு நாளாச்சு இப்பிடி நான் சப்போர்ட் பண்ணின டீம் ஜெயிச்சு!!!!!!!!!!!!!!.
ஹெய்டன் ய நீக்கிவிட்டு ஜஸ்டின் கேம்ப் அல்லது மைக் ஹுசே ய அணியில் இணைத்தால் நல்லது.
சொதப்புவதர்க்கும் ஒரு அளவு வேண்டாம் ?????????
Monday, September 13, 2010
தமிழ் தேசிய கூட்டமைப்பு
தமிழ் தேசிய கூட்டமைப்பு
தமிழ் மக்களின் நிலை அறிந்து அரசியல் செய்ய வேண்டிய சூழ்நிலையில் கை கட்டி வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டிருக்கும் மக்கள் பிரதிநிதிகள்.தமிழர்களுக்கு என்று ஒரு தேசிய கட்சி வேண்டும் என்பதும் தமிழர்களின் வாக்குகள் சிதரடிக்கப்படகூடாது என்பதும் சேர்ந்து பெரும்பாலான தமிழ் வாக்குகளை கூட்டமைப்புக்கு பெற்று கொடுத்திருக்கிறது.
அப்படி இருக்கையில் இன்னும் இலங்கைக்கு,பேரினவாதிகளுக்கு ஒத்து வராத, சாத்தியமே இல்லாத சமஷ்டி,அதிகார பரவலாக்கம்,சுய நிர்ணய உரிமை பற்றியெல்லாம் பேசி காலத்தை வீணடிக்கும் அரசியல் எதுக்கு?????????
18 ம் அரசியல் திருத்தத்தை தடுக்க முடியாது என்கிறபோதும் ,கூட்டமைப்பின் ஆதரவு இன்றியே பெரும்பான்மை கிடைக்கும் என்கிறபோதும் சாதுரியமாக யோசிக்காத அரசியல் எதற்கு ??????????
மீள்குடியேற்றபடாமல் அல்லாடும் மக்களையோ,எவ்வித விசாரணைகளும் இன்றி தடுத்து வைக்கப்படிருக்கும் எம் சகோதர சகோதரிகளையோ விடுவிக்கும் விடயத்தை மாத்திரமாவது முன்னிறுத்தி அரசுக்கு ஆதரவு வழங்கி இருக்கலாம்.
விலை போகாத அரசியல்,தன்மான தமிழர்,காட்டிகொடுக்காத அரசியல் என்ற வெட்டி பேச்சு புலம் பெயர் தமிழர்களை வேண்டுமானால் திருப்தி படுத்தலாம்.ஆனால் தொழில் இன்றி,உணவின்றி, முகவரி இன்றி தவிக்கும் நம் உறவுகளை நேசிக்கும் எந்தவொரு தமிழனையும் அது திருப்திப்படுத்தாது.
குறைந்த பட்சம் முஸ்லிம் காங்கிரஸ் இற்கு இருக்கும் அரசியல் சாணக்கியத்தில் ஒரு துளி ஏனும் நம் தலைவர்களிடம் இல்லை எனும்போது மனம் ரொம்பவும் வலிக்கிறது.காரணம் கூட்டமைப்புக்கு ஆதரவளிக்கும் லட்ச்சக்கனக்கானவர்களில் நானும் ஒருவன்.
தமிழ் மக்களின் நிலை அறிந்து அரசியல் செய்ய வேண்டிய சூழ்நிலையில் கை கட்டி வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டிருக்கும் மக்கள் பிரதிநிதிகள்.தமிழர்களுக்கு என்று ஒரு தேசிய கட்சி வேண்டும் என்பதும் தமிழர்களின் வாக்குகள் சிதரடிக்கப்படகூடாது என்பதும் சேர்ந்து பெரும்பாலான தமிழ் வாக்குகளை கூட்டமைப்புக்கு பெற்று கொடுத்திருக்கிறது.
அப்படி இருக்கையில் இன்னும் இலங்கைக்கு,பேரினவாதிகளுக்கு ஒத்து வராத, சாத்தியமே இல்லாத சமஷ்டி,அதிகார பரவலாக்கம்,சுய நிர்ணய உரிமை பற்றியெல்லாம் பேசி காலத்தை வீணடிக்கும் அரசியல் எதுக்கு?????????
18 ம் அரசியல் திருத்தத்தை தடுக்க முடியாது என்கிறபோதும் ,கூட்டமைப்பின் ஆதரவு இன்றியே பெரும்பான்மை கிடைக்கும் என்கிறபோதும் சாதுரியமாக யோசிக்காத அரசியல் எதற்கு ??????????
மீள்குடியேற்றபடாமல் அல்லாடும் மக்களையோ,எவ்வித விசாரணைகளும் இன்றி தடுத்து வைக்கப்படிருக்கும் எம் சகோதர சகோதரிகளையோ விடுவிக்கும் விடயத்தை மாத்திரமாவது முன்னிறுத்தி அரசுக்கு ஆதரவு வழங்கி இருக்கலாம்.
விலை போகாத அரசியல்,தன்மான தமிழர்,காட்டிகொடுக்காத அரசியல் என்ற வெட்டி பேச்சு புலம் பெயர் தமிழர்களை வேண்டுமானால் திருப்தி படுத்தலாம்.ஆனால் தொழில் இன்றி,உணவின்றி, முகவரி இன்றி தவிக்கும் நம் உறவுகளை நேசிக்கும் எந்தவொரு தமிழனையும் அது திருப்திப்படுத்தாது.
குறைந்த பட்சம் முஸ்லிம் காங்கிரஸ் இற்கு இருக்கும் அரசியல் சாணக்கியத்தில் ஒரு துளி ஏனும் நம் தலைவர்களிடம் இல்லை எனும்போது மனம் ரொம்பவும் வலிக்கிறது.காரணம் கூட்டமைப்புக்கு ஆதரவளிக்கும் லட்ச்சக்கனக்கானவர்களில் நானும் ஒருவன்.
Sunday, September 12, 2010
அஜித் -விஜய்
தமிழ் சினிமாவின் நட்சத்திர போட்டியாளர்கள். எனக்கு இருவரையும் பிடிக்காது என்பது என்னவோ உண்மைதான்(காரணம் நான் விக்ரம் ரசிகன்), ஆனால் நல்ல படங்கள் என்றால் எதையும் ரசிப்பவன்.
மேல் சொன்ன நடிகர்கள் இருவரையும் ஒப்பிட்டு பார்க்க நினைத்ததற்கு ஒரு காரணம் உண்டு. facebook ,முதலான அநேக தளங்களில் விஜயை தாக்கி,கேவலபடுத்தி எழுதப்படும் அளவுக்கு அஜித் பற்றி இல்லை (கொஞ்சம் குறைவு).ஏன் இந்த வித்தியாசம். பாரபட்ஷம்.அப்போதுதான் சில விடயங்களை யோசித்து பார்த்தேன்.
கோர்ட் சூர்ட் போட்டால் ஒருவருக்கு அழகு,மற்றவருக்கு???????
போலீஸ் கெட்டப் ஒருவருக்கு செம கச்சிதம்(தொப்பை),மற்றவருக்கு??????
கெட்டப் மாற்றியும் சில ஹிட் படங்கள்,மற்றவர் மாற்றாமலேயே ஹிட் படங்கள் சிலதுதான்.
ஒருவர் பேசும் தமிழ் சிரிப்பு,மற்றவர் பேசுவதே சிரிப்பு
ஆனால் ஒன்றில் மட்டும் இருவருக்கும் உள்ள ஒற்றுமை,
சளைக்காமல் சொதப்பல் படங்களாக தந்து கொண்டிருப்பதுதான் .
இன்னும் எவளவு காலம்தான் ஏமாற்றுவீர்????????????????????????
தமிழ் சினிமாவின் நட்சத்திர போட்டியாளர்கள். எனக்கு இருவரையும் பிடிக்காது என்பது என்னவோ உண்மைதான்(காரணம் நான் விக்ரம் ரசிகன்), ஆனால் நல்ல படங்கள் என்றால் எதையும் ரசிப்பவன்.
மேல் சொன்ன நடிகர்கள் இருவரையும் ஒப்பிட்டு பார்க்க நினைத்ததற்கு ஒரு காரணம் உண்டு. facebook ,முதலான அநேக தளங்களில் விஜயை தாக்கி,கேவலபடுத்தி எழுதப்படும் அளவுக்கு அஜித் பற்றி இல்லை (கொஞ்சம் குறைவு).ஏன் இந்த வித்தியாசம். பாரபட்ஷம்.அப்போதுதான் சில விடயங்களை யோசித்து பார்த்தேன்.
கோர்ட் சூர்ட் போட்டால் ஒருவருக்கு அழகு,மற்றவருக்கு???????
போலீஸ் கெட்டப் ஒருவருக்கு செம கச்சிதம்(தொப்பை),மற்றவருக்கு??????
கெட்டப் மாற்றியும் சில ஹிட் படங்கள்,மற்றவர் மாற்றாமலேயே ஹிட் படங்கள் சிலதுதான்.
ஒருவர் பேசும் தமிழ் சிரிப்பு,மற்றவர் பேசுவதே சிரிப்பு
ஆனால் ஒன்றில் மட்டும் இருவருக்கும் உள்ள ஒற்றுமை,
சளைக்காமல் சொதப்பல் படங்களாக தந்து கொண்டிருப்பதுதான் .
இன்னும் எவளவு காலம்தான் ஏமாற்றுவீர்????????????????????????
Saturday, September 11, 2010
கிரிக்கெட்
சாம்பியன்ஸ் கிண்ண t20 கிரிக்கெட் போட்டிகள் தென்னாபிரிக்காவில் 9 ம் திகதி ஆரம்பித்துவிட்டது. என்னதான் 8 அணிகள் மோதினாலும் நம் கவனம் அதிகம் ipl அணிகள் மீதுதான்.அதிக நட்சத்திர வீரர்களும்,வெறித்தனமான இந்திய ரசிகர்களும் தான் ipl போட்டி மட்டுமல்ல இத் தொடரயும் பிரபல்யபடுத்துகிறார்கள்.
முதல் போட்டியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மும்பை அணியின் தோல்வி ,கடந்த முறை ipl அணிகள் இத்தொடரில் சொதப்பியதை நினைவுபடுத்தியது. ipl இறுதிப்போட்டியை தொடர்ந்து இப்போட்டியிலும் பொல்லார்ட் மிகவும் தாமதமாகவே களமிறக்கப்பட்டார். ஒரு தோல்வியில் இருந்தாவது பாடம் கற்று கொண்டிருக்க கூடாதா?
சச்சின் இன் விளையாட்டு அபாரம்.இளம் வீரர்கள் அவரிடம் கற்று கொள்ள வேண்டியது நிறைய இருக்கு.
ஹர்பஜன் ,சாகிர் கான் ஆகியோரின் பம்மாத்துகள் சிறப்பாக இருந்தது.
மலிங்க மட்டும் பொறுப்பாக பந்து வீசினார் .
ஒட்டுமொத்தத்தில் மீண்டும் ஒருமுறை இந்திய ரசிகர்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்
முதல் போட்டியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மும்பை அணியின் தோல்வி ,கடந்த முறை ipl அணிகள் இத்தொடரில் சொதப்பியதை நினைவுபடுத்தியது. ipl இறுதிப்போட்டியை தொடர்ந்து இப்போட்டியிலும் பொல்லார்ட் மிகவும் தாமதமாகவே களமிறக்கப்பட்டார். ஒரு தோல்வியில் இருந்தாவது பாடம் கற்று கொண்டிருக்க கூடாதா?
சச்சின் இன் விளையாட்டு அபாரம்.இளம் வீரர்கள் அவரிடம் கற்று கொள்ள வேண்டியது நிறைய இருக்கு.
ஹர்பஜன் ,சாகிர் கான் ஆகியோரின் பம்மாத்துகள் சிறப்பாக இருந்தது.
மலிங்க மட்டும் பொறுப்பாக பந்து வீசினார் .
ஒட்டுமொத்தத்தில் மீண்டும் ஒருமுறை இந்திய ரசிகர்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்
சரத் பொன்சேகா
சரத் பொன்சேகாவின் பதக்கங்கள்,தர நிலைகள் பறிப்பு
அரசன் அன்று கொள்ளும் தெய்வம் நின்று கொள்ளும் என்பார்களே அது இதுதான். என்னதான் பொன்சேகா தன்னை கதாநாயகனாக காட்டி கொண்டாலும் ,பாதிக்கப்பட்ட தமிழ் உறவுகளின் சாபம் ஒன்றும் சும்மாவிடபோவதில்லை.
அரசன் அன்று கொள்ளும் தெய்வம் நின்று கொள்ளும் என்பார்களே அது இதுதான். என்னதான் பொன்சேகா தன்னை கதாநாயகனாக காட்டி கொண்டாலும் ,பாதிக்கப்பட்ட தமிழ் உறவுகளின் சாபம் ஒன்றும் சும்மாவிடபோவதில்லை.
மனதின் ஆழத்தில் இருந்து...................
இனிய தமிழ் உறவுகளே,
என் மனதில் தோன்றும் எண்ணங்களை பதிவு செய்ய இந்த தளத்தை ஆரம்பித்திருக்கிறேன்.உங்கள் கருத்துகளை, நல்ல விமர்சனங்களை தந்து ஊக்கபடுத்தூவீர் என நம்புகிறேன்.
என்றும் அன்புடன்,
லெரோ
என் மனதில் தோன்றும் எண்ணங்களை பதிவு செய்ய இந்த தளத்தை ஆரம்பித்திருக்கிறேன்.உங்கள் கருத்துகளை, நல்ல விமர்சனங்களை தந்து ஊக்கபடுத்தூவீர் என நம்புகிறேன்.
என்றும் அன்புடன்,
லெரோ
Subscribe to:
Comments (Atom)