இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்கள்
சமீப காலமாக இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படுவது பற்றி கடும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுவருகின்றன.இலங்கையிலிருந்து பலரும் வெளிநாடு சென்று கற்பதனால் இலங்கைக்கு அந்நிய செலாவணி விடயத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்படுகிறது.அரசாங்கத்தரப்பு இதனை காரணம் காட்டி தனியார் முதலீட்டினை கல்வியில் ஈடுபடுத்த அனுமதிகளை வழங்கி வருகிறது.இலவச கல்வி முறைமைக்கு பாதிப்பு வராதவரை இது நல்ல விடயம்தான்.ஆனாலும் அரசினதும் சில அமைச்சர்களினதும் நடவடிக்கைகளை பார்க்கும்போது இத்திட்டமானது பொது மக்களின் நன்மைக்காக கொண்டுவரப்படுகிறதா என்பதில் சந்தேகம் ஏற்படுகிறது.
குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்படுவதும் இதன்காரணமாக அரச பல்கலைக்கழகங்களில் கற்றல் கற்ப்பித்தல் நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதும் தொடர்ந்து இடம்பெறுகிறது.இது தனியார் கல்வி தொடர்பிலான மாணவர்களுக்கு சார்பானதாக அமைவதோடு பொதுமக்களை அது தொடர்பில் ஈர்ப்பதாகவும் அமைகிறது.எந்த பெற்றார்தான் தன் பிள்ளை விரைவாக படித்து முடித்து ஒரு நல்ல வேலைக்கு செல்லவேண்டும் என எதிர்பார்க்கமாட்டார்?
மேலும் இலங்கையில் அமைக்கப்படும் தனியார் பல்கலைக்கழகங்களில் பெரும்பாலானவை அரச பக்கம் தாவியுள்ள ஐ.தே.க. உறுப்பினர்களாலேயே ஸ்தாபிக்கப்படுவதானது இலங்கையின் கல்வி அரசின் குறுகிய லாபங்களுக்காக அடகு வைக்கப்படுகிறதா என்ற கேள்வியை ஏற்ப்படுத்துகிறது.இந்தியாவை போன்று இலங்கையிலும் அமைச்சர்களினதும் கட்சிகளினதும் நிதி மூலங்களாக கல்வி மாற்றப்படுகிறது.இந்தியாவில் அதிகரித்த தனியார் கல்விப்பல்கலைக்கழகங்களால் கூடுதலான பட்டதாரிகள் உருவாக்கப்பட்டபோதும் கல்லூரிகளின் கல்வித்தரம் சரியாக கேள்விக்கு உட்படுத்தப்படவில்லை.உலகின் முன்னணி பல்கலைக்கழகங்கள் வரிசையில் இந்தியா பின்தங்கி நிற்பதற்கு இதுவே காரணம். இதே நிலை வெகு விரைவில் இலங்கையிலும் ஏற்படப்போகிறது என்பது கசப்பான உண்மை.
1 comment:
niraya visayam sari
aanaa ithu kaalathin kaddaayam....lavan
Post a Comment